2013-07-15 15:52:36

உத்தரகண்ட்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவனந்தபுரம் பெருமறைமாவட்டம் உதவி


ஜூலை,15,2013. வட இந்தியாவின் உத்தரகண்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, வரும் ஞாயிறன்று திருவனந்தபுரம் பெருமறைமாவட்டத்தின் அனைத்துக் கோவில்களிலும் நிதி திரட்டப்படும் என அறிவித்துள்ளார் அப்பெருமறைமாவட்டப் பேராயர் சூசை பாக்கியம்.
இந்தியாவின் தென் பகுதியைத் தாக்கிய சுனாமிக்குப் பின்னர் உத்தரகண்டில் அன்ண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கே பெரிய இயற்கை பாதிப்பு என்ற பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்பதையும் எடுத்துரைத்தார்.
இப்பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களில், 50,000 காப்பாற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும், உணவு, மருந்து, துணி போன்றவைகளின் பற்றாக்குறை இன்னும் உள்ளது என்ற பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், துன்புறும் மக்களுக்கு உதவ வேண்டிய கடமையை வலியுறுத்தினார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.