திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவிக்கும்
நாளை நிர்ணயிக்கும் கூட்டம் வருகிற செப்டம்பரில்
ஜூலை,09,2013. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகிய
இருவரையும் புனிதர் என அறிவிக்கும் தேதி குறித்து கலந்து பேசுவதற்கு, வருகிற செப்டம்பரில்
கர்தினால்கள் அவை இடம்பெறக்கூடும் எனத் திருப்பீட பத்திரிகை அலுவலக இயக்குனர் இயேசு சபை
அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். இவ்விரு திருத்தந்தையரும் ஒரே நாளில் புனிதர்கள்
என அறிவிப்படக்கூடும், அந்த நாள் இவ்வாண்டுக்குள் இடம்பெறலாம் என்றும் அருள்பணி லொம்பார்தி
கூறினார். அண்மைக் காலத்தில் இரு திருத்தந்தையர் ஒரே நாளில் புனிதர்கள் அறிவிக்கப்படுவது
இதுவே முதன்முறையாக இருக்கும் எனவும் கூறிய அருள்பணி லொம்பார்தி, 2000மாம் ஆண்டில் திருத்தந்தை
23ம் ஜான், திருத்தந்தை 9ம் பத்திநாதர் ஆகிய இருவரும் ஒரே நாளில் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு
உயர்த்தப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.