2013-07-09 15:36:42

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் ஒருபோதும் சோர்வடையக் கூடாது


ஜூலை,09,2013. கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் சோர்வடையக் கூடாது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாய்க்கிழமையன்று இவ்வாறு ஒன்பது மொழிகளில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருப்பீடச் செயலகம் @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், மிகுந்த வறிய நாடுகளுக்கு உண்மையிலேயே சாதகமாக இருக்கும் ஒருமைப்பாட்டுணர்வுப் படிவம், அறிவியல், தொழிநுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவைப்படுகின்றது என்று இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.