ஜூலை,04,2013. அன்பு
நேயர்களே, சென்னை-மயிலைப் பேராயர் மேதகு ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் ஜூன் 29, கடந்த சனிக்கிழமையன்று
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற பெருவிழாத் திருப்பலியில், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களிடமிருந்து, பேராயர்கள் கழுத்தில் அணியும் பாலியத்தைப் பெற்றார். அந்நிகழ்வையொட்டி
சென்னை-மயிலைப் பேராயர் மேதகு ஜார்ஜ் அன்டனிசாமி அவர்களைச் சந்தித்தோம். பேராயர் மேதகு
ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் லைபீரியா, சியெரா லியோன், காம்பியா, கினி ஆகிய நான்கு ஆப்ரிக்க
நாடுகளின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியிருப்பவர்.