திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவின் அன்பும் நட்பும் மாயை அல்ல
ஜூலை,04,2013. கிறிஸ்துவின் அன்பும் நட்பும் மாயை அல்ல, ஆனால் அவை எவ்வளவு உண்மையானவை
என்பதை இயேசு சிலுவையில் காட்டினார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழக்கிழமையன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் @Pontifex
என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் ஏறக்குறைய தினமும்
எழுதி வருகிறார். மேலும், AIF என்ற வத்திக்கானின் நிதியைக் கண்காணிக்கும் இரகசிய அமைப்பு,
உலகளாவிய இரகசிய நிதி அமைப்பின்(FIUs) வலையமைப்பான Egmont குழுவின் 21வது உறுப்பாகச்
சேர்க்கப்பட்டுள்ளது என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது. AIF நிதி
அமைப்பு, Egmont குழுவில் இணைந்துள்ளதன் மூலம், நிதி சார்ந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில்
தகவல் பரிமாற்றங்களுக்கும் அக்குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் உதவிகள்
கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 1995ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Egmont குழுவில்
130க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புகளாக உள்ளன.