2013-07-03 15:07:09

ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்துக்குப் புதிய பேராயர்


ஜூலை,03,2013. இந்தியாவின் ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, ஆயர் விக்டர் ஹென்றி தாக்கூர் அவர்களை இப்புதன்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த பேராயர் Joseph Augustine Charanakunnel அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், Bettiah மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் விக்டர் ஹென்றி தாக்கூர் அவர்களை ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமித்துள்ளார்.
1954ம் ஆண்டு ஜூலை முதல் தேதி Bettiah மறைமாவட்டத்தின் Chakhni என்ற ஊரில் பிறந்த ஆயர் விக்டர் ஹென்றி தாக்கூர், 1984ம் ஆண்டு மே 3ம் தேதி அருள்பணியாளராகவும், 1998ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி Bettiah மறைமாவட்டத்துக்கு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.
மேலும், பாகிஸ்தானின் ஃபாய்சலாபாத் மறைமாவட்டத்துக்கு அருள்பணி Joseph Arshad அவர்களை புதிய ஆயராக இப்புதன்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். லாகூரில் 1964ம் ஆண்டு பிறந்த இவர், போஸ்னிய-எர்செகொவினா திருப்பீடத் தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.