2013-07-01 14:33:20

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்


ஜூலை,01,2013. 'இன்று திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கானநாள். இந்நாளின் செபங்களுக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நன்றி கூறுகின்றேன்' எனதன் ஞாயிறு டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு செபம் மற்றும் நிதி உதவி மூலம் ஆதரவு வழங்குபவர்களுக்கு தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு நன்றியை வெளியிட்டுள்ளதிருத்தந்தை, அதே நாளில் இரண்டாவது செய்தியையும் வெளியிட்டுள்ளார்.
'கிறிஸ்தவர்கள் ஒரு போதும் சலிப்படைவதில்லை, மற்றும் சோகமடைவதில்லை. மாறாக, கிறிஸ்துவை அன்புகூர்பவர்கள், மகிழ்வு நிரம்பியவர்களாகவும் அம்மகிழ்வை வழங்குபவர்களாகவும் இருப்பார்கள்' என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாவது டுவிட்டர் செய்தி கூறுகின்றது.
இதற்கிடையே, திருப்பீடச்செயலகம் இத்திங்களன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'அடிப்படை மருந்துக்கள், மற்றும் தொழில் நுட்பம் உலகில் அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்கும் உலக அர்ப்பணம் உருவாவதை, கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படாத பேராசையே தடைச்செய்கிறது' என தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.