2013-06-25 15:57:36

கர்தினால் தாக்லே : திருத்தந்தை பிரான்சிஸ் ஆசியக் கத்தோலிக்கர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்


ஜூன்,25,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசிய மற்றும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்று மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே தெரிவித்தார்.
அண்மையில் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கர்தினால் தாக்லே, நாம் விசுவாசத்தில் வளர்வது, அன்னைமரியாமீது உண்மையான பக்தி கொண்டிருப்பதுடன் தொடர்பு கொண்டது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கத் திருஅவைமீது உயர்வான நம்பிக்கை வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அனைத்து விசுவாசிகளும் தனக்காகச் செபிக்குமாறும், அன்னைமரியாமீது கொண்டிருக்கும் விசுவாசத்தை அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டதாக கர்தினால் தாக்லே கூறினார்.
ஆசியாவில் பிலிப்பீன்சும், கிழக்குத் திமோரும் கத்தோலிக்க நாடுகளாகும்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.