2013-06-21 16:32:07

கொலம்பியக் காரித்தாஸ் : 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தலத்திருஅவை புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வருகின்றது


ஜூன்,21,2013. அகதிகளின் நெருக்கடிகளுக்குப் பாராமுகமாய் இருக்க வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, அகதிகளுக்கு ஆதரவு வழங்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது கொலம்பியக் காரித்தாஸ் நிறுவனம்.
தங்களின் இடங்களைவிட்டுக் கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களுக்கு நம்பிக்கையின் ஒளியைக் கொடுக்குமாறு கொலம்பியக் காரித்தாஸ் நிறுவனம் அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்துலக அகதிகள் தினமான இவ்வியாழனன்று இவ்வாறு கேட்டுள்ள கொலம்பிய ஆயர் பேரவையின் காரித்தாஸ் நிறுவனம், கொலம்பியத் தலத்திருஅவை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வருகின்றது என்று கூறியுள்ளது.
கொலம்பியாவில் தற்போது 50 இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் உள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.