2013-06-21 16:34:30

இவ்வுலகில் அமைதி மற்றும் சுதந்திரம்” என்ற விருதை L'Arche அமைப்பின் நிறுவனர் பெறுகிறார்


ஜூன்,21,2013. இவ்வாண்டின், “இவ்வுலகில் அமைதி மற்றும் சுதந்திரம்” என்ற விருது L'Arche அமைப்பின் நிறுவனர் Jean Vanier என்பவருக்கு வருகிற ஜூலை 7ம் தேதி வழங்கப்படவுள்ளது.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களையும், 1963ம் ஆண்டில் அவர் வெளியிட்ட "Pacem in Terris"(இவ்வுலகில் அமைதி) என்ற திருமடலை நினைவுகூரவும் இவ்விருது வழங்கப்படுகிறது.
கொல்கத்தா முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசா, பேராயர் டெஸ்மண்ட் டுட்டு உட்பட சிலருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
1964ம் ஆண்டில் பிரான்சின் Trosly-Breuil என்ற சிறிய கிராமத்தில் தொடங்கப்பட்ட L'Arche அமைப்பு, அறிவு வளர்ச்சி குன்றிய மற்றும் அறிவு வளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கெனப் பணி செய்து வருகின்றது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.