காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க மூங்கில் சவப்பெட்டிகள்
காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க தங்களால் ஆன உதவிகளை வழங்கும் நோக்கில் மிசோரம் கத்தோலிக்கத்
திருஅவை, மூங்கில்களால் சவப்பெட்டிகளைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது. இறந்தோரை அடக்கம்
செய்ய சவப்பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் மரங்கள் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கும்
நோக்கில், மூங்கில்களால் சவப்பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக அம்மாநில கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் 98 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிசோரம்
இளம் கிறிஸ்தவ இயக்கத்தால் மூன்றாண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட 'பசுமை மிசோரம்' என்ற
காடுகள் பாதுகாப்புத் திட்டம் தற்போது மக்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.