2013-06-17 17:05:05

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


ஜூன்,17,2013. எவருடனாவது கோபமாக இருக்கிறாயா? அப்படியெனில் அவருக்காக செபம் செய், அதுவே கிறிஸ்தவ அன்பு என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் டுவிட்டர் பக்கத்தில் தன் ஒரு வரிச்சிந்தைகளை முன்வைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறும், திங்களும், மன்னிப்பும் அன்பும் என்பதை மையக்கருத்தாக வைத்து எழுதியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று தன டுவிட்டர் பக்கத்தில், 'திருஅவை எப்போதும் கருணை மற்றும் நம்பிக்கையின் இடமாக இருக்கட்டும். அங்கு அனைவரும் தாங்கள் வரவேற்கப்படுவதையும் அன்புகூரப்படுவதையும், மன்னிப்புப் பெறுவதையும் உணரட்டும்' என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : SEDOC








All the contents on this site are copyrighted ©.