தரமான கல்வி, இனவெறியையும், மொழிவெறியையும் களைய உதவும், ஐ.நா. வல்லுனர்
ஜூன்,15,2013. தரமான கல்வியை வழங்குவதன்மூலம் இனவெறி, மொழிவெறி மற்றும் பிற பாகுபாடுகளைக்
களைய முடியும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வல்லுனர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார். புதிய
விழுமியங்களையும் புதிய எண்ணங்களையும் ஊட்டுவதில் கல்விக்கு மையப்பங்கு உள்ளது என்றும்,
இதன்மூலம் வரலாற்றில் ஆழமாகப் புரையோடிப்போயுள்ள அநீதிகளையும் பாகுபாடுகளையும் களைய முடியும்
என்றும் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் அவையில் Mutuma Ruteere கூறியுள்ளார். சிறுபான்மையினர்,
புலம்பெயர்ந்தோர், குடியேற்றதாரர் மற்றும் வலுவற்ற குழுக்களால் சமுதாயத்துக்கு ஏற்படும்
நன்மைகள் குறித்தத் தகவல்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்பதையும் Ruteere வலியுறுத்தியுள்ளார்.