ஜூன்,15,2013. உலகம் வெப்பமயமாவதால் அண்டார்டிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இருக்கும்
பனிக்கட்டிகள் உருகுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருக்க, தற்போது அப்பெருங்கடலின் அடிப்பகுதியில்
படிந்து கிடக்கும் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகுவதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த அறிவியலாளர் எரிக் ரிக்னாட் குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த
2003ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரை சராசரியாக 1,325 இலட்சம் கோடி கிலோ பனிக்கட்டிகள்
உருகியுள்ளவேளை, 1,100 இலட்சம் கோடி கிலோ பனிக்கட்டிகள் புதிதாக உருவாகியுள்ளன. அண்டார்டிக்
பெருங்கடலின் ஆழமான பகுதியில் 3 மிகப் பெரிய இராட்சத பனிக்கட்டிகள் உருகியுள்ளன. அவை
முழுமையான அண்டார்டிகாவின் மூன்றில் 2 மடங்காகும். ஆயினும் பெருங்கடலின் மேற்பரப்பில்
15 விழுக்காடு பனிக்கட்டிகள் மட்டுமே உருகியுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.