2013-06-11 17:04:11

திருப்பீடத்திற்கும் வியட்நாமிற்கும் இடையே நான்காம் சுற்றுப்பேச்சுவார்த்தைகள்


ஜூன்,11,2013. திருபீடத்திற்கும் வியட்நாம் அரசுக்கும் இடையே நான்காம் சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இவ்வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் வத்திக்கானில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் தலைநகரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற மூன்றாம் சுற்றுப்பேச்சுவர்த்தைகளின்போதே இக்கூட்டம் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக அறிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான அரசியல் உறவை மேம்படுத்துவது குறித்து அண்மையச் சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : SeDoc








All the contents on this site are copyrighted ©.