ஜூன்,10,2013. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமிய முதலாளி
ஒருவரின் நிலத்தில் ஏழைக் கிறிஸ்தவர் ஒருவரின் ஆடுகள் புகுந்து மேய்ந்ததற்கு பழிவாங்கும்
நடவடிக்கையாக அக்கிறிஸ்தவரின் வீட்டு மூன்று பெண்களைத் தாக்கி நிர்வாணமாக கிராமத்தெருக்களில்
நடத்திச் சென்றுள்ளனர் இஸ்லாமிய நில உரிமையாளர்கள். Shoukat Masih என்ற கிறிஸ்தவரின்
ஆடுகள் இஸ்லாம் பண்ணையாரின் நிலத்தில் புகுந்து மேய்ந்ததைத் தொடர்ந்து, இக்கிறிஸ்தவரின்
73 வயது தந்தையும் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல்கள் குறித்த புகாரை பாகிஸ்தான்
காவல்துறை ஏற்க மறுத்துள்ளதுடன் கிறிஸ்தவர்கள் மீது தண்டனைக்குரிய குற்றம் பதிவு செய்யப்படும்
எனவும் மிரட்டியுள்ளது.