2013-06-10 16:59:39

திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்திக்க உள்ளார் ஆங்கிலிக்கன் தலைவர்


ஜூன்,10,2013. இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபையின் புதியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளபேராயர் Justin Welby இவ்வாரம் வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் பதவியேற்று ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இச்சந்திப்பு, இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பாக இருக்கும்.
வத்திக்கான புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்குக் கீழே உள்ள தூய பேதுரு கல்லறையை தரிசித்து செபிக்க உள்ள ஆங்கிலிக்கன் தலைவர் பேராயர் Welby, அதன் பின்னர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலின் கல்லறையையும் தரிசிப்பார் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார் ஆங்கிலிக்கன பேராயர் ஜஸ்டின் வெல்பி.

ஆதாரம் : SEDOC








All the contents on this site are copyrighted ©.