2013-06-08 16:31:02

பங்களாதேசில் குருத்துவப் பயிற்சி இல்லம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது


ஜூன்,08,2013. பங்களாதேசின் Dinajpur மறைமாவட்டத்தில் உள்ள, அந்நாட்டு குருத்துவ மாணவர்களுக்கான பயிற்சிக் கல்லூரி, அப்பகுதி இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டுள்ளது.
எதனால் குருத்துவக்கல்லூரி தாக்கப்பட்டது என்பது குறித்து காரணம் தெரியவில்லை என்று கூறிய Dinajpur ஆயர் Sebastian Tudu, குருத்துவப் பயிற்சி மாணவர்கள் சிலரும் தாக்கப்பட்டுள்ளது குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இஸ்லாமியர்களின் இத்தாக்குதலைத் தொடர்ந்து "Jisu Niloy Dhyana" குருத்துவக்கல்லூரியின் 25 மாணவர்களும் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் கத்தோலிக்கத் திரு அவையின் சமூகப்பணி உதவிகளைப் பெறும் பூர்வீக குடிமக்களுடன் அப்பகுதி இஸ்லாமியக் குழு ஒன்றிற்கு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அதன் காரணமாக, இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.