2013-06-08 16:33:17

ஆந்திராவில் 20 கிறிஸ்தவ போதகர்கள் தாக்கப்பட்டுள்ளனர்


ஜூன்,08,2013. Baptist கிறிஸ்தவ சபையின் 20 போதகர்கள் மதத் தீவிரவாத அமைப்பு ஒன்றால் ஆந்திராவில் தாக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தின் Maheshwaram Mandal என்ற பகுதியில் உள்ள கிறிஸ்தவக் கோவிலைத் தாக்கிய 50 பேர் கொண்ட இக்கும்பல், மக்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற இப்போதகர்கள் முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
தாக்கப்பட்ட 20 கிறிஸ்தவ போதகர்களுள் ஏழு பேர் சிகிச்சைக்கென மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டியிருந்தது.
கர்நாடகாவைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவிலும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் துவக்கியிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகத்தின் பொதுச்செயலர் ஜான் தயாள்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.