திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மைவிட்டு வெளியே வர கிறிஸ்து நம்மை வழிநடத்துகிறார்
ஜூன்,04,2013. நம்மையே பிறருக்கு வழங்கவும், நாம் பிறருக்குப் பணிபுரிவதற்குமென நம்மை
விட்டு அதிகமதிகமாக வெளியே வர கிறிஸ்து நம்மை வழிநடத்துகிறார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில்
இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், சில நேரங்களில்
நாம் செய்ய வேணடுமென்பதை அறிந்திருக்கிறோம், ஆனால் அதற்கான துணிச்சல் நம்மிடம் குறைவுபடுகின்றது,
ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்து தீர்மானங்களை எப்படி எடுக்க வேண்டுமென்பதை அன்னைமரியிடம்
கற்றுக் கொள்வோம் என்று இத்திங்களன்று டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை. @Pontifex
என்ற டுவிட்டர் பக்கத்தில் ஏறக்குறைய தினமும் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் செய்தியை
வெளியிட்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். நல்வாழ்வு மற்றும் சமூகநீதியை ஊக்குவிப்பதில்
தனியார் நிறுவனங்கள் பெரும்பங்காற்ற வேண்டும் என்று திருப்பீடச் செயலகம் இச்செவ்வாயன்று
தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது. TerzaLoggia @TerzaLoggia என்ற டுவிட்டர்
பக்கத்தில், இத்தாலியம் மற்றும் ஆங்கிலத்தில் செய்திகளை வெளியிட்டு வருகிறது திருப்பீடச்
செயலகம்.