உலகில் ஆயுத வியாபாரத்தைத் தடைசெய்யும் உடன்பாட்டில் கையெழுத்திட நாடுகளுக்கு அழைப்பு
ஜூன்,04,2013. பன்னாட்டு அளவில் ஆயுத வியாபாரங்களை முழுவதுமாக நிறுத்துவதற்கு உதவும்
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஐ.நா. நிறுவனம். இந்த
ஒப்பந்தத்தில் நாடுகள் கையெழுத்திடும் நடவடிக்கை இத்திங்களன்று ஐ.நா.தலைமையகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த
ஒப்பந்தத்தை 50 நாடுகள் நடைமுறைப்படுத்திய 90 நாள்களுக்குப் பின்னர் இது அமலுக்கு வரும்.
இந்த ஒப்பந்தத்தை 2 மாதங்களுக்கு முன் ஐ.நா.பொது அவையில் 154 நாடுகள் ஏற்றுக் கொண்டன.