ஜூன்,03,2013. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை அவர்களை கேப் வெர்தே நாட்டின்
அரசுத்தலைவர் Jorge Carlos de Almeida Fonseca சந்தித்து உரையாடினார். இரு தலைவர்களுக்கும்
இடையே இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே,
நாடுகளுடன் ஆன உறவுகளுக்கானத் திருப்பீடச் செயலகத்தின் செயலர் பேராயர் Dominique Mamberti
ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார் அரசுத்தலைவர் Almeida Fonseca. இரு நாடுகளிடையே
நிலவி வரும் உறவு குறித்தும், கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு குறித்தும் இச்சந்திப்பின்போது
விவாதிக்கப்பட்டது.