2013-05-24 16:37:59

சீனாவில் திருஅவையின் ஒற்றுமைக்காகச் செபம்


மே,24,2013. சீனக் கத்தோலிக்கர் Sheshan அன்னையாகிய சகாய அன்னையின் திருவிழாவை இவ்வெள்ளிக்கிழமையன்று சிறப்பித்தவேளை, Shanghaiல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நகர் துணை ஆயர் Ma Daqin அந்நாட்டில் திருஅவையின் ஒற்றுமைக்காகச் செபித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் சீனக் கத்தோலிக்கருடன் தொடர்பு கொண்ட ஆயர் Ma, ஆண்டவருக்கு அஞ்சுவது இதயத்துக்கு மகிழ்ச்சி கொடுக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயர் Ma Daqin இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தனது சமூக வலைத்தளத்தின் மூலம் மக்களோடு தொடர்பு கொண்டார்.
இவ்விழா நாளில் சீனாவிலுள்ள கத்தோலிக்கர் நாடெங்கும் பிறரன்புச் செயல்களையும் செப வழிபாடுகளையும் நடத்தியுள்ளனர்.
Shanghaiயிலுள்ள Sheshan அன்னைமரித் திருத்தலம் தேசியத் திருத்தலமாகும். ஆண்டுதோறும் மே 24ம் தேதியன்று இத்திருத்தல விழாச் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.