2013-05-23 16:47:00

வருகிற அக்டோபர் 4ல் அசிசியில் திருத்தந்தை பிரான்சிஸ்


மே,23,2013. ஒப்புரவு மற்றும் அன்பின் நற்செய்தியை நாம் வாழ்கின்ற மற்றும் வேலை செய்யும் இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றோமா? என்ற கேள்வியை இவ்வியாழனன்று @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழாவான அக்டோபர் 4ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அசிசி நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்வார் என்று அசிசி ஆயர் Domenico Sorrentino இவ்வியாழனன்று அறிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அசிசி திருப்பயணத்தை உறுதி செய்யும் கடிதம் ஒன்று திருப்பீடச் செயலகத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Angelo Becciuவின் கையொப்பத்துடன் தனக்கு வந்துள்ளதாக ஆயர் Sorrentino கூறினார்.
இத்தாலியின் பாதுகாவலரான புனித பிரான்சிஸின் உணர்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மகிழ்ச்சியோடு தாங்கள் வரவேற்பதாகவும் ஆயர் Sorrentino நிருபர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.