2013-05-20 17:10:09

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு பாராமுகம்!- என்கிறார் சொல்ஹெய்ம்


மே 20, 2013. போரில் கண்ட வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசு, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் பராமுகமாய் உள்ளதால், சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்று இலங்கைக்கான நார்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கை போரில் கண்ட வெற்றி தொடர்பாக, தனது டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிட்ட எரிக்சொல்ஹெய்ம், இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான போரில் அடைந்த வெற்றியின் 4வது ஆண்டை, தேசிய போர் வெற்றி விழா என்று மிகவும் விமரிசையாக கொண்டாடிய நிலையில், இலங்கையின் உள்நாட்டுப் போருக்குக் காரணமாக இருந்த தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்ற கவலையை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.