2013-05-20 16:58:58

சிங்கப்பூர் புதிய பேராயர் நியமனம்


மே 20, 2013. சிங்கப்பூர் பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரின் பணிஓய்வை ஏற்றுக்கொண்டு, புதிய பேராயராக அவ்வுயர்மறைமாவட்ட வாரிசுரிமைப் பேராயர் William Goh Seng Chyeஐ நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1938ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி பிறந்த முன்னாள் பேராயர் Nicholas Chia Yeck Joo, தன் 75ம் வயதில் பதவி ஓய்வு பெற்றுள்ளதை முன்னிட்டு இப்புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
புதியப் பேராயராகநியமிக்கப்பட்டுள்ளசிங்கப்பூரின் வாரிசுரிமைப்பேராயர் William Goh, 1957ம் ஆண்டு பிறந்து 1985ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி ஆயராகதிருநிலைப்படுத்தப்பட்டு, சிங்கப்பூரின் வாரிசுரிமைப் பேராயராகபணியாற்றிவந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.