2013-05-18 15:40:53

பங்களாதேஷின் தொழிலாளர் குறித்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. வரவேற்பு


மே,18,2013. பங்களாதேஷில் Rana Plaza என்ற 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்குப் பின்னர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தம் ஒன்றில் பல பன்னாட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டிருப்பது குறித்த தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
Inditex, Carrefour, H&M போன்ற பெரிய ஐரோப்பிய அனைத்துலக நிறுவனங்கள் உட்பட 37 நிறுவனங்கள், பங்களாதேஷில் தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இவ்வொப்பந்தத்தால் பங்களாதேஷில் கட்டிட விபத்து, தீ விபத்து மற்றும் பிற விபத்துக்களுக்குத் தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை என்று ILO அனைத்துலக தொழில் நிறுவனம் கூறியது.
கடந்த மாதத்தில் Rana Plaza என்ற 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1,100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.