2013-05-18 15:43:40

உலக வங்கி : இந்தியாவும், சீனாவும் 2030ம் ஆண்டுக்குள் பெரிய முதலீட்டாளர்களாக மாறும்


மே,18,2013. உலக அளவில் முதலீடு செய்யப்படும் மொத்த நிதியில் வளரும் நாடுகளுக்குச் செல்லும் தொகை, அடுத்த இருபது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று உலக வங்கி தனது புதிய அறிக்கையில் கணித்துள்ளது.
வளரும் நாடுகளும், அவற்றின் இளைய மற்றும் பெருமளவான மக்கள்தொகையும் முதலீடுகளுக்கு மிகப்பெரிய வளங்களாக அமையும் என்றுரைக்கும் உலக வங்கி, இந்தியாவும், சீனாவும் 2030ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டு பெரிய முதலீட்டாளர்களாக மாறும் என்றும் கூறியுள்ளது.
2030ம் ஆண்டுக்குள் உலகில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரின் 60 சென்ட்டுகள், வளரும் நாடுகளுக்குச் செல்லும், ஆனால், 2000மாம் ஆண்டில் ஒவ்வொரு டாலரின் 20 சென்ட்டுகளே இந்நாடுகளில் முதலீடு செய்யப்பட்டன என்றும் அவ்வறிக்கையில் உலக வங்கி கூறியுள்ளது.

ஆதாரம் : Reuters







All the contents on this site are copyrighted ©.