அலெப்போ ஆயர்களின் விடுதலையை வலியுறுத்தி கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம்
மே,17,2013. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு அலெப்போ ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதை
வலியுறுத்தி வருகிற செவ்வாயன்று Ammanல் கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இந்த
ஊர்வலம் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜோர்டன் பேராயர் Maroun Laham, இந்த
ஊர்வலத்தில் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். கடந்த
மாதம் 22ம் தேதி தங்களது மனிதாபிமானப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பியபோது அலெப்போவின்
Syrian ஆர்த்தடாக்ஸ் பேராயர் Mar Gregorios Yohanna Ibrahim, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர்
Boulos al-Yazigi ஆகிய இருவரும் கடத்தப்பட்டனர். மேலும், தமஸ்கு மற்றும் அலெப்போ நகரப்
பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களிடமிருந்து சிரியாவின் புரட்சிக்குழுக்கள் பணம் கேட்பதாகவும்,
இப்பணம் ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார் பேராயர் Jacques Behnan
Hindo.