2013-05-15 17:35:15

மும்பை உயர்மறைமாவட்டத்திற்கு இரு துணை ஆயர்கள் நியமனம்


மே,15,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மும்பை உயர்மறைமாவட்டத்திற்கு இரு துணை ஆயர்களை இப்புதனன்று நியமித்துள்ளார்.
மும்பை உயர்மறை மாவட்டத்தின் Chancellor ஆகப் பணியாற்றிவரும் அருள் பணியாளர் Dominic Savio Fernandes அவர்களையும், Goregaonல் உள்ள புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றிவரும் அருள் பணியாளர் John Rodrigues அவர்களையும் துணை ஆயர்களாக திருத்தந்தை நியமித்துள்ளார்.
இந்த நியமனங்கள் உரோம் நேரம் 12 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.