2013-05-13 16:52:36

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


மே,13,2013. தாயின் கருவில் உருவானது முதல், மனித உயிர், மாண்புடன் மதிக்கப்பட்டு காப்பாற்றப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இஞ்ஞாயிறு திருப்பலியின் இறுதியில், அவ்வாளகத்தில் கூடியிருந்த அனைவருக்கும் நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, அதே ஞாயிறன்று உரோம் நகரில் வாழ்விற்கான ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டதையும், கருவில் வளரும் குழந்தைகளுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டி இத்தாலியின் பங்கு தளங்களில் கையெழுத்து திரட்டும் பிரச்சாரம் இடம்பெற்று வருவதையும் குறிப்பிட்டு, வாழ்வை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நம்பிக்கை ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அடுத்த மாதம், அதாவது ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் 'Evangelium Vitae நாள்' என்ற பெயரில் வத்திக்கானில் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது குறித்தும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை, இது மனித வாழ்வின் புனிதத்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் சிறப்புக்கவனம் செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.