கிறிஸ்தவர்கள் காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அதன் கடும் விளைவுகளை எதிர்கொள்ள
வேண்டும், ஓர் இசுலாமியர்
மே,11,2013. காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட்டு அனைத்துக் கிறிஸ்தவ மறைபோதகர்களும் வெளியேற
வேண்டும், இல்லையெனில் அதனால் ஏற்படும் விளைவுகளால் துன்புற வேண்டியிருக்கும் என்று ஓர்
இசுலாமியத் தீவிரவாத அமைப்பின் பேச்சாளர் எச்சரித்துள்ளார் என்று ஆசியச் செய்தி நிறுவனம்
கூறியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் கிறிஸ்தவர்கள், அங்கு வாழும் ஏழைகளுக்குப்
பொருளாதார உதவிகளைச் செய்து அவர்களை மதம் மாற்றுகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்,
ஜம்மு-காஷ்மீர் ஜிகாத் குழுக்களில் ஒன்றான, ஒன்றிணைந்த ஜிகாத் கழகத்தின் பேச்சாளர் Sadagat
Hussain Syed. Sadagat விடுத்துள்ள இந்த எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள
அனைத்திந்திய கிறிஸ்தவர்களின் உலக அமைப்பின் தலைவர் Sajan George, கிறிஸ்தவர்கள் வாழ்ந்துவரும்
நெருக்கடியான சூழலை இது காட்டுகின்றது எனத் தெரிவித்தார். கிறிஸ்தவர்களுக்கு எதிரான
சகிப்பற்றதன்மை வளர்ந்து வருவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள Sajan George, விவிலியங்களையும்,
கிறிஸ்தவம் சார்ந்த பொருள்களையும் விநியோகித்தற்காக இரு தென்கொரியர்கள் ஒரு கூட்டத்தினரால்
அடிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.