திருத்தந்தை பிரான்சிஸ் : ஜெனோவா துறைமுக விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் செபம்
மே,10,2013. இத்தாலியின் ஜெனோவா துறைமுகத்தில் சரக்கு கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது
மற்றும் அவ்விபத்தினால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் குறித்த தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாய் இரவு ஜெனோவா துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் எடைகொண்ட
Jolly Nero என்ற சரக்குக் கப்பல், 50 மீட்டர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரத்தை இடித்ததில்
அக்கோபுரம் சரிந்து வீழ்ந்தது. அதில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர். திருத்தந்தையின்
பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில்,
இவ்விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாவல்
அன்னைமரியிடம் அர்ப்பணித்துச் செபிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில்
காணாமற்போயுள்ள இன்னும் இருவரை மீட்புப்பணியினர் தொடர்ந்து தேடி வருகின்றனர் எனச் சொல்லப்பட்டுள்ளது.