2013-05-08 16:21:31

மெக்சிகோ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


மே,08,2013. மெக்சிகோ பேரு நகரின் Ecatepec பகுதியில் இச்செவ்வாயன்று நிகழ்ந்த விபத்தில் இறந்தவர்களுக்கும், காயமடைந்தோருக்கும் தன் செபங்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தன் அனுதாபங்களையும் தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று வீடுகள் மத்தியில் மோதி, வெடித்ததால், பத்து குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காயப்பட்டுள்ள 26 பேரில் 13 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளதென்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோர் அனைவருக்கும் திருத்தந்தையின் பெயரால் அனுதாபத் தந்தியை Ecatepec ஆயர் Roberto Dominguez Couttolenc அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் குவாதலுப்பே அன்னை மரியாவின் அரவணைப்பில் ஒப்படைப்பதாகவும் திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.