திருத்தந்தை பிரான்சிஸ் : புனிதப் பாதையில் விடாஉறுதியுடன் நடங்கள்
மே,07,2013. “அரைகுறை கிறிஸ்தவர்களாக வாழ்வதில் திருப்தியடைந்து விடாதீர்கள், புனிதப்
பாதையில் விடாஉறுதியுடன் நடங்கள்” என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இத்தாலியின் Piemonte மாநில ஆயர்களை அட் லிமினாவையொட்டி
சந்தித்த திருத்தந்தை, இன்னல்களில் இருக்கும் குடும்பங்களுக்கு இறைவனின் கருணையைக் காட்டவேண்டுமெனக்
கேட்டுக்கொண்டார். வயதான மற்றும் நோயாளிக் குருக்களின் நிலைமை, இறையழைத்தல் பற்றாக்குறை,
இளையோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவை குறித்தும் Piemonte ஆயர்களிடம் பேசினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.