வேலைவாய்ப்பு ஏதுமின்றி வாழும் அனைவரையும் நான் மீண்டும் இன்று எண்ணிப் பார்க்கிறேன்
- திருத்தந்தையின் Twitterசெய்தி
மே,02,2013. வேலைவாய்ப்பு ஏதுமின்றி வாழும் அனைவரையும் நான் மீண்டும் இன்று எண்ணிப் பார்க்கிறேன்.
எவ்வகையிலாயினும் இலாபம் ஒன்றையே ஈட்ட வேண்டும் என்று என்னும் சுயநல மனங்களால், வேலைவாய்ப்பின்மை
உலகில் உருவாகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று Twitter செய்தியொன்றை
வெளியிட்டார். @pontifex என்ற திருத்தந்தையின் Twitter பக்கத்தில் ஆங்கிலம், பிரெஞ்ச்,
இத்தாலியம், இஸ்பானியம், அரேபியம் உட்பட ஒன்பது மொழிகளில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,
திருத்தந்தையின் பெயரால் திருப்பீட அலுவலகம் வெளியிட்டுள்ள மற்றொரு Twitter செய்தியில்,
வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் அனைவரும், தங்களால் இயன்ற அளவு வேலை வாய்ப்புக்களை உருவாக்கி,
உழைப்பாளர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதே நான் விடுக்கும் வேண்டுகோள்
என்று கூறப்பட்டுள்ளது.