2013-04-30 16:05:46

திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு


ஏப்.30,2013. இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres, திருத்தந்தை இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தையைத் தனியே சந்தித்துப் பேசிய பின்னர் நிருபர்கள் முன்னிலையில் திருத்தந்தைக்கு இவ்வழைப்பை முன்வைத்த அரசுத்தலைவர் Peres, எருசலேமில் தான் மட்டுமல்ல, இஸ்ரேல் நாட்டினர் அனைவரும் திருத்தந்தைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அனைவருக்காகச் செபிக்குமாறும் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்ட Peres, இப்புதனன்று அசிசியில் புனித பிரான்சிசின் கல்லறையில் திருத்தந்தைக்காகத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.