2013-04-30 16:12:01

சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆயர்கள் விடுதலை செய்யப்படுமாறு கர்தினால் டோலன் வேண்டுகோ


ஏப்.30,2013. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் விடுதலை செய்யப்படுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் திமொத்தி டோலன்.
அமைதியின் இம்மனிதர்கள் கடத்தப்பட்டிருப்பது, சிரியா சமூகத்தின் அமைப்பையே அழிக்கும் கொடூரமான வன்முறையின் அடையாளமாக இருக்கின்றது என்று கர்தினால் டோலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் கடத்தப்பட்டிருப்பதும், அவர்களது வாகன ஓட்டுனர் கொல்லப்பட்டிருப்பதும் நன்மனம் கொண்ட மக்களின் இதயங்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இந்த ஏப்ரல் 22ம் தேதியன்று மனிதாபிமானப்பணிகளை முடித்துத் திரும்பும் வழியில் சிரியா ஆர்த்தடாக்ஸ் பேராயர் John Ibrahim, சிரியா கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Paul Yagizi ஆகிய இருவரும் அலெப்போவுக்கு அருகில் கடத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.