ஏப்.30,2013. கானடா சமுதாயம் சூதாட்டத்தைச் சார்ந்திருப்பது வளர்ந்து வருவது குறித்து
அண்மை ஆண்டுகளாக அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டு வருகின்றனர். Toronto
நகரில் புதிய மற்றும் பெரிய சூதாட்ட அரங்கம் கட்டுவது குறித்து அரசு சிந்தித்துவரும்வேளை,
சூதாட்டத்தை எச்சரித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள Toronto உயர்மறைமாவட்ட கர்தினால்
Thomas Collins, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டங்கள் குறித்த தனது கவலையைத் தெரிவித்துள்ளார். சூதாட்டம்
தன்னிலே தீமையானது என்றும், திருஅவையின் மறைக்கல்வி ஏட்டில் சூதாட்டத்தினால் ஏற்படும்
பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Collins.
சூதாட்டத்தினால் அரசுக்குப் பணம் நிறையக் கிடைப்பதால் இதற்கு மக்கள் மட்டுமல்ல, அரசும்
அடிமையாகி விடுகின்றது என்றும் Toronto கர்தினாலின் அறிக்கை கூறுகிறது. ஆதாரம் :
வத்திக்கான் வானொலி