புது வகை மலேரியா ஒட்டுண்ணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
ஏப்.29,2013. மலேரியா நோயைத் தரும் ஒட்டுண்ணிக் கிருமிகளில், அந்நோயைக் கட்டுப்படுத்த
உதவும் முக்கிய மருந்தான அர்டெமிஸினின் என்ற மருந்துக்குக் கட்டுப்படாத மூன்று பிரிவுகளை
தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த மூன்று பிரிவு ஒட்டுண்ணியுமே
கம்போடியாவின் மேற்குப் பகுதியில் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது இவை அண்டையிலுள்ள
பகுதிகளுக்கும் பரவி வருவதாகத் தெரிகிறது. தங்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு பொதுமருத்துவத்தில்
பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.