டான்சானிய நாட்டு ஒன்றிப்புத் தினத்துக்கு திருத்தந்தை வாழ்த்து
ஏப்.27,2013. டான்சானியக் குடியரசின் மக்கள் அமைதியையும் நல்வாழ்வையும் அனுபவிக்குமாறுத்
தான் எல்லாம்வல்ல இறைவனிடம் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏப்ரல்
26, இவ்வெள்ளிக்கிழமையன்று ஒன்றிப்புத் தினத்தைச் சிறப்பித்த டான்சானிய நாட்டு அரசுத்தலைவர்
Jakaya Mrisho Kikwete அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார். கிழக்கு
ஆப்ரிக்க நாடுகளாகிய Tanganyikaம், Zanzibarம் பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த பின்னர்
1964ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியன்று ஒன்றாக இணைந்து டான்சானியா என்ற ஒரே நாடாக மாறியது.
அந்த நாளே டான்சானிய ஒன்றிப்பு நாளாகச் சிறப்பிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு
2004ம் ஆண்டில் அப்போதைய அரசுத்தலைவர் Benjamin Mkapa ஏறக்குறைய 4,500 கைதிகளுக்குப்
பொது மன்னிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.