செர்னோபில் அணுமின்நிலைய விபத்தின் பாதிப்புக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்கப்படக் கூடாது
ஏப்.27,2013. செர்னோபில் அணுமின்நிலைய விபத்தின் பாதிப்புக்கள் வரலாற்றில் ஒருபோதும்
மறக்கப்படக் கூடாது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார். 27 ஆண்டுகளுக்கு
முன்னர் ஏப்ரல் 26ம் தேதியன்று இடம்பெற்ற இவ்விபத்து குறித்துப் பேசிய பான் கி மூன்,
அவ்விபத்தின்போது தங்கள் உயிரையும் பணயம் வைத்து அவசரகாலப் பணி செய்தப் பணியாளர்களை இந்நாளில்
நினைவுகூருவோம் என்று கூறினார். செர்னோபில் அணுமின்நிலைய விபத்தினால் 3 இலட்சத்து
30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ளனர்,
மாசுகேடடைந்துள்ள பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து
வருகின்றனர் என்றும் பான் கி மூன் கூறினார். 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியன்று உக்ரேய்னின்
செர்னோபில் அணுமின்நிலைய விபத்து ஏற்பட்டது.