ஏப்.27,2013. 2016ம் ஆண்டு மே மாதம் 23 முதல் 29 வரை பிலிப்பீன்சின் செபுவில் அடுத்த
அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறும் என்று செபு உயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
“கிறிஸ்து உன்னில் இருக்கிறார் : மகிமையின் நம் நம்பிக்கை” என்ற தலைப்பில் 2016ம்
ஆண்டில் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறும் என்று அவ்வுயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
அனைத்துலக திருநற்கருணை மாநாடு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் ஏதாவது
ஒரு நாட்டில் நடைபெறுகின்றது. 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு 2012ம் ஆண்டில் அயர்லாந்தில்
நடைபெற்றது. 1937ம் ஆண்டில் பிலிப்பீன்சின் மனிலாவில் இம்மாநாடு நடைபெற்றுள்ளது. 1964ம்
ஆண்டில் பம்பாயில் 38வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெற்றது.