2013-04-26 15:50:30

அனைத்துலக அறிவுச்சொத்து தினம் படைப்பாற்றல்திறனை ஊக்குவிக்கின்றது


ஏப்.26,2013. படைப்பாற்றல்திறன்கொண்ட அடுத்த தலைமுறையினர் கனவு காண்பதற்குரிய திறமையைக் கொண்டுள்ளனர், இந்தத் தலைமுறையாகிய இளையோரே வருங்காலம் என்று அனைத்துலக அறிவுச்சொத்து நிறுவன இயக்குனர் Francis Gurry கூறினார்.
ஏப்ரல் 26, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக அறிவுச்சொத்து தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட Gurry, மனித சமுதாயம் அனைத்துக்கும் பொதுவான படைப்பாற்றல்திறனும், கண்டுபிடிப்புத்திறனும் இவ்வுலகின் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவதற்கு பொறுப்பானவை என்று கூறியுள்ளார்.
உலகில் படைப்பாற்றல்திறனும், புதிது புதிதான கண்டுபிடிப்புகளும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் Gurry.
அன்றாட வாழ்வில் அறிவுச்சொத்தின் பங்கு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் WIPO என்ற அனைத்துலக அறிவுச்சொத்து நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் 2000மாம் ஆண்டில் இந்த அனைத்துலக அறிவுச்சொத்து தினத்தைக் கடைப்பிடிக்கப்பட்டத் தொடங்கின.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.