2013-04-23 15:32:23

இந்தியாவில் வாய்ப் புற்றுநோயால் 3 இலட்சம் பேர் பாதிப்பு


ஏப்.23,2013. உலகில் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் உள்ளனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நீண்டகாலம் புகையிலை மெல்லுதல் மற்றும் புகைப் பிடிப்பதால் ஏற்படும் வாய்ப் புற்றுநோயால் இந்தியாவில் ஒரு இலட்சம் பேருக்கு 20 பேர் வீதம் இறக்கின்றனர், அதேநேரம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இவ்விறப்புகள் ஒரு இலட்சத்துக்கு 10 என்ற விகிதத்திலும், மத்திய கிழக்குப் பகுதியில் ஒரு இலட்சத்துக்கு 2 என்ற விகிதத்திலும் உள்ளன என்று அவ்வாய்வு கூறுகிறது.
துபாயில் வருகிற மே 1 முதல் 5 வரை நடைபெறவிருக்கும் வாய்ப் புற்றுநோய் குறித்த மாநாட்டையொட்டி இவ்வாய்வு வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் மக்களை அதிகம் தாக்கியுள்ள ஆறுவகை புற்றுநோய்களில் வாய்ப் புற்றுநோயும் ஒன்றாகும். வெற்றிலை, பாக்கு, பான்பராக் உட்பட புகையிலையுடன்கூடிய பாக்குக் கலப்புகளை எப்போதும் மென்று கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : P.Observer







All the contents on this site are copyrighted ©.