திருத்தந்தை பிரான்சிஸ் புதிய குருக்களிடம் : திருஅவையாகிய இறைவனின் வீட்டை சொல்லாலும்
செயலாலும் கட்டுமாறு வேண்டுகோள்
ஏப்.22,2013. திருஅவையாகிய இறைவனின் வீட்டை வார்த்தையாலும் வாழ்வாலும் கட்டுமாறும், குருத்துவத்
திருப்பணியை மகிழ்ச்சியோடு செய்யுமாறும் புதிய அருள்பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை பிரான்சிஸ். 50வது இறையழைத்தல் தினமான, இஞ்ஞாயிறன்று, இரண்டு இந்தியத்
தியாக்கோன்கள் உட்பட 10 தியாக்கோன்களை உரோம் மறைமாவட்டத்துக்கென அருள்பணியாளர்களாக அருள்பொழிவு
செய்த திருப்பலியில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. நல்லாயன் ஞாயிறான இஞ்ஞாயிறு
காலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ்,
இந்தப் புதிய அருள்பணியாளர்கள் மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இறைவனுக்கு
ஏற்றதை மட்டுமே செய்வதற்கு அம்மக்கள் சார்பாக அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள்
நினைவில் வைக்க வேண்டுமெனவும் கூறினார். இவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்குப்
பிரமாணிக்கமாக இருந்து அதற்குச் சாட்சி சொல்ல வேண்டுமெனவும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவின்
குருத்துவப் பணியை உறுதியான மகிழ்ச்சியோடும் உண்மையான அன்போடும் செய்யுமாறும் கூறினார். புதிய
அருள்பணியாளர்கள் தங்களின் சொந்த விருப்பப்படி இல்லாமல் இயேசு கிறிஸ்துவைச் சார்ந்ததையே
செய்ய வேண்டும், நீங்கள் மேய்ப்பர்கள், செயல்படுபவர்கள் அல்ல, எனவே இடையில் வந்தவர்களாக
இல்லாமல், இடைநிலையாளர்களாக இருங்கள் எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.