கோஸ்டா ரிக்கா திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் செய்தி
ஏப்.22,2013. கோஸ்டா ரிக்கா நாட்டில் இடம்பெறும் தேசிய நற்கருணை மாநாட்டிற்குத் தன் வாழ்த்துக்களையும்
சிறப்புச் செய்தியையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 'திருநற்கருணை: நம்
மக்களுக்கு வாழ்வின் உணவு' என்ற தலைப்பில் இடம்பெறும் தேசிய நற்கருணை மாநாட்டிற்குத்
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள
தந்திச்செய்தி, விசுவாசிகளின் செப வாழ்வைப் பலப்படுத்தவும், திருநற்கருணையை வாழ்வின்
மையமாக வைக்கவும், இம்மாநாட்டு நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்
என திருத்தந்தை விரும்புவதாகத் தெரிவிக்கிறது. மேலும், ஒப்புரவு நிறைந்த ஓர் உலகை
கட்டியெழுப்ப திருநற்கருணை நமக்கு உதவுவதாக என அத்தந்திச் செய்தியில் கூறியுள்ளார் பாப்பிறை.