2013-04-20 16:23:39

சாஹெல் பகுதியில் 14 இலட்சம் சிறார்க்கு அவசர உணவு உதவி தேவை


ஏப்.20,2013. ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில் 8 ஆண்டுகளில் மூன்று கடும் பஞ்சங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அப்பகுதி மக்கள் அவற்றின் தாக்கங்களினின்று வெளிவருவதற்கு இயலாமல் உள்ளனர் என்று பசியைப் போக்குவதற்கு முயற்சிக்கும் ACF என்ற அரசு சாரா அமைப்பு கூறியது.
சாஹெல் பகுதியில் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் 14 இலட்சம் சிறார் இறந்து கொண்டிருக்கின்றனர் எனவும், 1 கோடியே 30 இலட்சம் மக்கள் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர் எனவும் ACF அமைப்பு தெரிவித்தது.
மேலும், இந்தியாவில் 33 விழுக்காட்டு மக்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி வெளி்யிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.