2013-04-19 16:04:29

திருத்தந்தை பிரான்சிஸ், ஈக்குவதோர் அரசுத்தலைவர் சந்திப்பு


ஏப்.19,2013. இவ்வெள்ளியன்று ஈக்குவதோர் அரசுத்தலைவர் Rafael Vicente Correa Delgadoவை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Correa Delgado.
ஈக்குவதோர் சமூக வாழ்வின் பல்வேறு துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் மற்றும் ஈக்குவதோர் நாட்டுக்கும், தலத்திருஅவைக்கும் இடையேயான உறவுகள் குறித்து இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
ஈக்குவதோர் நாட்டின் பூர்வீக இனமக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் மதித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நாட்டின் சமூகநீதி மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல் போன்ற விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாகத் திருப்பீடம் மேலும் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.