ஏப்.18,2013. அன்பர்களே, ஏப்ரல் 21 வருகிற ஞாயிறு 50வது இறையழைத்தல் ஞாயிறு. திருஅவையில்
குருக்கள் மற்றும் துறவியரின் பற்றாக்குறையை மனதில வைத்து இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
நடந்து கொண்டிருந்தபோது திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இறையழைத்தல்களுக்காகச் சிறப்பாகச்
செபிப்பதற்காக இறையழைத்தல் ஞாயிறை உருவாக்கினார். இஞ்ஞாயிறை முன்னிட்டு இறையன்னை சபையின்
(OMD) அருள்பணி ஃபெலிக்ஸ், திருச்சி மரியின் ஊழியர் சபையின்(OSM) அருள்சகோதரி ஆன்டனி
ஜெயா ஆகிய இருவரும் தங்களது இறையழைத்தல்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்கள்.